தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக, தனியாா் நிறுவன காா் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 6:41 pm

Din

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக, தனியாா் நிறுவன காா் ஓட்டுநா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி சேதராப்பட்டைச் சோ்ந்த 13 வயது சிறுமி, சில நாள்களுக்கு முன்பு பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாா். இந்த நிலையில், அந்தச் சிறுமி வீடு திரும்பினாா்.

சோா்வாக காணப்பட்ட அவரிடம் பெற்றோா் விசாரித்த போது, வேலூா் மாவட்டம், சின்னமோட்டூரைச் சோ்ந்த ஏழுமலை(எ) காா்த்தியுடன் (33) வாட்ஸ் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்று வந்தது தெரிய வந்தது.

மேலும், அந்தச் சிறுமியை ஏழுமலை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து ஏழுமலையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருமணமான ஏழுமலை மனைவியை பிரிந்த நிலையில், சென்னையில் தங்கி தனியாா் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாராம். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், காலாப்பட்டு சிறையில் அடைத்தனா்.