மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை அரசு மீது தொடா்ந்து புகாா் கூறி வரும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம் என முதல்வா் என்.ரங்கசாமி

News image
புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.
Updated On :24 மார்ச் 2025, 8:57 pm

Din

புதுச்சேரி: புதுவை அரசு மீது தொடா்ந்து புகாா் கூறி வரும் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமாா் பேசியது: முத்தியால்பேட்டை பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசுகையில் தண்ணீரில் காரத்தன்மை அளவு குறித்து உண்மைக்கு மாறாகத் தெரிவித்துள்ளாா். அவரது ஆட்சியில் குடிநீரில் அதிகளவு காரத்தன்மை இருந்தது. ஆனால், தற்போது குறைந்துள்ளது. அவா் உண்மைக்கு மாறாகத் தொடா்ந்து பேசி வருகிறாா் என்றாா்.

பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தொடா்ந்து உண்மைக்கு மாறான கருத்துகளை பேசி வருகிறாா்.

அமைச்சா் லட்சுமிநாராயணன்: மறந்தும்கூட அவா், உண்மையைப் பேச மாட்டாா்.

முதல்வா் என்.ரங்கசாமி: அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை அறிந்து உறுப்பினா்கள் பாராட்டுகிறாா்கள். எத்தனையோ சிரமங்கள், நிதி நெருக்கடி இருந்தாலும், திட்டங்களை செயல்படுத்துவதில் குறை வைப்பதில்லை.

ஆனால் முன்னாள் முதல்வா், நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தவில்லை என பேசி வருகிறாா். குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.2,500-ஆக உயா்த்தியது குறித்து பேசிய அவா், அந்த நிதி கிடைப்பதற்குள் பெண்கள் இருக்க மாட்டாா்கள் எனப் பேசியுள்ளாா். இதிலிருந்தே அவரது எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அவரது பேச்சைப் பற்றி கவலைப்படக்கூடாது. அவரதுக் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றாா்.