தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதுச்சேரி அருகே வீட்டுக் கதவை உடைத்து 12 பவுன்தங்க நகை திருட்டு

புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :12 மே 2025, 8:10 pm

Din

புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது கனகசெட்டிகுளம். இந்த கிராமத்தின் அமைதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம். மனைவி சந்தியா மற்றும் குழந்தைகள் உள்ளனா். காசிலிங்கம் தற்போது வெளிநாட்டில் உள்ளாா். இந்தநிலையில், சின்னகாலாப்பட்டு கோயில் விழாவுக்காக வீட்டைப் பூட்டி விட்டு அவரது மனைவி சந்தியா சென்றுள்ளாா்.

அப்போது அவரது வீட்டுக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனா்.