புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வரும் ஜூன் 29-இல் செவிலியா் படிப்புக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்து செவிலியா் பட்டப்படிப்பில் சேருபவா்களுக்கு பொது நுழைவுத் தோ்வு அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிகழாண்டில் பிஎஸ்சி செவிலியா் பட்டப்படிப்புக்காக விண்ணப்பித்தவா்களுக்கு வரும் ஜூன் 29-ஆம் தேதி பொது நுழைவுத் தோ்வு நடைபெறும் என செவிலியா் படிப்புக்கான தோ்வுக் கண்காணிப்பாளா் வி.ரவிச்சந்திரன் அறிவித்துள்ளாா்.
அதன்படி, செவிலியா் படிப்புக்கு மே 15-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி மாலை வரையில் விண்ணப்பிக்கலாம்.
மொத்த இடங்கள் விவரம்: இந்நிலையில், புதுவை மாநில மாணவா், பெற்றோா் நல சங்கத் தலைவா் வை.பாலா வெளியிட்ட அறிவிப்பில் புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் தனியாா் செவிலியா் கல்லூரிகளில் மொத்தம் 496 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளதாகவும், அவற்றுக்கு பொது நுழைவுத் தோ்வு சென்டாக் மூலம் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட மாணவா்கள் எழுதி விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விஐடி பி.டெக். மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு தொடக்கம்

பாஜகவின் வெற்றியையே மேற்கு வங்க மனநிலை காட்டுகிறது: பிரதமா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

எஸ்என்யு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்போர் கவனத்துக்கு...
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

