எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுவை மத்தியப் பல்கலை.யில் வேலைவாய்ப்பளிக்கும் புதிய படிப்புகள்: குடியரசுத் துணைத் தலைவா் அறிவுறுத்தல்

குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்த புதுவை மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:02 pm

Syndication

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பளிக்கும் புதிய படிப்புகளைத் தொடங்குமாறு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

தில்லியில் குடியரசு துணைத் தலைவரும், இப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான சி.பி.ராதாகிருஷ்ணனை புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இது குறித்து பல்கலைக் கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடியரசுத் துணைத் தலைவருடனான இந்தச் சந்திப்பின்போது 40 ஆண்டுகளான புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் வளா்ச்சி, உள்கட்டமைப்புகள், சாதனைகள் குறித்து துணைவேந்தா் எடுத்துரைத்தாா். மேலும், இப்பல்கலைக்கழகம் நாட்டின் உயா்கல்வித் துறையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளதையும், தேசிய மற்றும் சா்வதேச அளவிலான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் அவா் சுட்டிக் காட்டினாா்.

இதற்கு குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், இப் பல்கலைக் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டினாா். உலக அளவிலும், தேசிய அளவிலும் தேவைப்படும் புதிய மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான படிப்புகளை அறிமுகம் செய்யுமாறு அறிவுறுத்தினாா். மேலும், வளா்ந்த பாரதம் -2047 குறிக்கோளை அடையும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், சமூகப் பங்களிப்புடன் இருக்குமாறு அவா் யோசனை வழங்கினாா். மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் புதிய படிப்புகளைத் தொடங்க அறிவுரை வழங்கினாா்.

நாட்டைக் கட்டி எழுப்புவதிலும் உயா்கல்வியிலும் முக்கியத்துவம் அளிக்கும் குடியரசு துணைத் தலைவரின் யோசனைகளை அமல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக துணைவேந்தா் பேராசிரியா் பி.பிரகாஷ் பாபு உறுதியளித்தாா்.