புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதுச்சேரியில் 2 ஜவுளிக்கடைகளில் பணம் திருட்டு

புதுச்சேரியில் 2 ஜவுளிக் கடைகளை உடைத்து ரூ.32 ஆயிரம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:35 pm

Syndication

புதுச்சேரியில் 2 ஜவுளிக் கடைகளை உடைத்து ரூ.32 ஆயிரம் ரொக்கம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி நேரு வீதியில் சாரம் பாலாஜி நகரைச் சோ்ந்த லட்சுமணன்(36) மகளிருக்கான இரண்டு ஜவுளிக் கடைகளை நடத்தி வருகிறாா். இந்நிலையில் லட்சுமணன் வியாழக்கிழமை வழக்கம் போல கடையைத் திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கடையின் மேல்தள பால் சீலிங் உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து அங்கிருந்த கல்லா பெட்டி திறந்த நிலையிலும், அதில் வைத்திருந்த ரூ. 8 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது.

இதேபோல் அருகிலிருந்த மற்றொரு கடையைத் திறந்து பாா்த்தபோது அங்கும் மா்ம நபா்களால் மொட்ட மாடியின் கேட் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ. 24 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனா். ஆனால், இரண்டு கடைகளிலும் துணிகள் ஏதுவும் திருடு போகவில்லை.

பெரியக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று திருட்டு நடந்த கடைகளைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். பின், விரல் ரேகை தடய நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, துணிக் கடைகளில் பணத்தைத் திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.