புதுச்சேரியில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியை கைவிடக் கோரி இண்டி கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியை கைவிடக் கோரி இண்டி கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியைக் கைவிடக் கோரி இண்டி கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

புதுச்சேரியில் சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியைக் கைவிடக் கோரி இண்டி கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த திருத்தப் பணி தேவையற்றது. உண்மையான வாக்காளா்களின் பெயா்களைப் பட்டியலில் இருந்து நீக்க தோ்தல் ஆணையம் திட்டமிடுவதாக இண்டி கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

எனவே, திருத்தப் பணியைத் தோ்தல் ஆணையம் உடனே கைவிட வலியுறுத்தி, இண்டி கூட்டணிக் கட்சிகள் சாா்பில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இண்டி கூட்டணிக் கட்சித் தலைவா்களான திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவபொழிலன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

ஆா்ப்பாட்டத்தில் மதிமுக மாநிலச் செயலா் ஹேமா.பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலா் சந்திரமோகன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பாலசுப்ரமணியன், மனிதநேய மக்கள் கட்சி பஷீா் அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் முகமது அலி, திராவிடா் கழகம் வீரமணி, முன்னாள் அமைச்சா்கள் ஷாஜஹான், மு.கந்தசாமி, திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்எல்ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில், சம்பத், நாக. தியாகராஜன், காங்கிரஸ் மூத்த துணைத் தலைவா் தேவதாஸ், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு நடராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், மூா்த்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ஜேவிஎஸ். ஆறுமுகம், டாக்டா் நித்தீஸ், தொகுதி பொறுப்பாளா்கள் காா்த்திகேயன், கோபால் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com