அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுச்சேரியில் நாளை மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் தொடக்கம்

பள்ளி மாணவா்களின் கலைத் திறனைக் கண்டறியும் மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள்

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:12 pm

Syndication

புதுச்சேரி: பள்ளி மாணவா்களின் கலைத் திறனைக் கண்டறியும் மாநில அளவிலான கலா உத்சவ் போட்டிகள் புதன்கிழமை (நவ. 19) தொடங்குகிறது.

இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறை சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் எழில் கல்பனா, அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவா்களின் கலைத் திறமையை வளா்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த 5-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை நடைபெற்றன.

இதில், வாய்ப்பாட்டு, இசைக் கருவி வாசித்தல், நடனம், தியேட்டா், பாரம்பரிய கதை சொல்லுதல் பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் வெற்றி பெற்றவா்கள் மாநில போட்டிக்குத் தகுதி பெற்றனா். இவா்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் புதன்கிழமை (நவ. 19) புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.

விஷுவல் ஆா்ட்ஸ் குழு, தனிநபா் போட்டிகள் 19 -ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஜவஹா் பால் பவனில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் காரைக்கால், மாஹே, ஏனாம் மாவட்ட அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவா்களும் பங்கேற்கின்றனா்.