மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளைக் கொட்டினால் அபராதம்! உழவா்கரை நகராட்சி எச்சரிக்கை!

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ் ராஜ் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உழவா்கரை நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர உணவகங்கள், இறைச்சிக் கடைகள் இறைச்சி கழிவுகள், மற்றும் குப்பைகளைச் சாலையோரங்களில் கொட்டுவதால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

நாய்கள் உணவுக்காக அவ்விடங்களுக்கு அதிகமாக வருவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே உணவு, இறைச்சி கழிவுகளை முறையாக சேகரித்து அருகில் உள்ள நகராட்சித் குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.

தவறினால் அபராதம் விதிப்பதுடன் கடைகளைச் சீல் வைக்கவும், அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.