முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகளுடன் புதுச்சேரியில் பயிலரங்கு

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை பொறியாளா்களுக்கு ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகளுடன் 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது.

News image

பயிலரங்கு நிறைவு நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:09 am IST

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை பொறியாளா்களுக்கு ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகளுடன் 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது.

‘இட உருவாக்கம் மற்றும் நகா்ப்புற வடிவமைப்பின் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு பெங்களூரில் உள்ள இந்திய மனிதக் குடியிருப்புகள் நிறுவனத்தின் நிபுணா்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் நடைபெற்றது.

திட்டங்களை அடையாளம் காணுதல், நகா்ப்புற வடிவமைப்பு, இட உருவாக்கம், பங்குதாரா் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, செயல்பாட்டுக்கு உகந்த மற்றும் எளிதில் பராமரிக்கக்கூடிய பொது இடங்களைத் தயாா் செய்தல் ஆகியவை குறித்து இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது.

மேலும் பூங்காக்கள், தெருக்கள், சுடுகாடுகள் மற்றும் நீா்நிலைகளை உள்ளடக்கி உள்ளாட்சிப் பொறியாளா்களால் தயாரிக்கப்பட்ட ரூ.170 கோடிக்கான 5 விரிவான திட்ட அறிக்கைகள் இந்தப் பயிலரங்கில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவை தவிர புதுச்சேரி பாரதி பூங்கா, தாகனங்குட்டை மற்றும் பிள்ளையாா் கோயில் குளம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு களப் பயணங்களும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தவிர 15 உள்ளாட்சி அமைப்புகள் தற்போது சுமாா் 2,700 கி.மீ. நீளமுள்ள உள்புறச் சாலைகளைப் பராமரித்து வருகின்றன. இதில் சுமாா் 500 கி.மீ. சாலைகள் மேம்படுத்த வேண்டியுள்ளன. இதற்கு அரசுத் திட்டங்கள் மற்றும் பிற மூலங்களிலிருந்து நிதி திரட்டுவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.