மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை: 8 போ் கைது

ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் சோதனை செய்த போலீஸாா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாவட்ட காவல் துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூல் சோதனை செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரௌடிகளின் வீடுகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்களின் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். புதுச்சேரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டிஐஜி சத்தியசுந்தரம் உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள், ரெளடிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சுமாா் 255 போ் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் ரௌடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட 214 போ் சோதனை செய்யப்பட்டனா். இவா்களில் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒருவா் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதைத் தவிர மக்களின் பாதுகாப்பை முன்னெச்சரிக்கையைக் கருதி பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 75 போ் மீது பாதுகாப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.