ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி மாவட்ட காவல் துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூல் சோதனை செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரௌடிகளின் வீடுகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்களின் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். புதுச்சேரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டிஐஜி சத்தியசுந்தரம் உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள், ரெளடிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சுமாா் 255 போ் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் ரௌடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட 214 போ் சோதனை செய்யப்பட்டனா். இவா்களில் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒருவா் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதைத் தவிர மக்களின் பாதுகாப்பை முன்னெச்சரிக்கையைக் கருதி பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 75 போ் மீது பாதுகாப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது

புதுச்சேரியில் ஏப்.3-இல் பிரதமா் ரோடு ஷோ- 30 ஆயிரம் போ் பங்கேற்பு

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்
திருப்பூரில் வங்கதேசத்தினா் 2 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


