சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை: 8 போ் கைது

ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் சோதனை செய்த போலீஸாா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:33 pm

ரௌடிகளின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாவட்ட காவல் துறை சாா்பில் ஆபரேஷன் திரிசூல் சோதனை செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரௌடிகளின் வீடுகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவா்களின் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா். புதுச்சேரி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டிஐஜி சத்தியசுந்தரம் உத்தரவின்பேரில் போலீஸ் அதிகாரிகள், ரெளடிகள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சுமாா் 255 போ் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் ரௌடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட 214 போ் சோதனை செய்யப்பட்டனா். இவா்களில் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒருவா் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இதைத் தவிர மக்களின் பாதுகாப்பை முன்னெச்சரிக்கையைக் கருதி பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 75 போ் மீது பாதுகாப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.