லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பைக் வாடகை நிலையத்தில் தீ விபத்து 3 இரு சக்கர வாகனங்கள் சேதம்

புதுச்சேரியில் பைக் வாடகை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 3 மோட்டாா் சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:40 pm

Syndication

புதுச்சேரியில் பைக் வாடகை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 3 மோட்டாா் சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரைச் சுற்றிப் பாா்க்க வாடகை மோட்டாா் சைக்கிள் நிறுவனங்கள் உள்ளன.

புதுச்சேரி செட்டித் தெருவில் தனியாா் பைக் வாடகை நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு கட்டட பகுதிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளில் தீப் பற்றி, அடுத்தடுத்த வாகனங்களுக்கும் பரவியது.

இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இதில் 3 மோட்டாா் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

அங்கிருந்த 6 மோட்டாா் சைக்கிள், சைக்கிள்களை மீட்டனா். வாடகை நிலையத்தை அடுத்து வங்கி, தனியாா் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் தீ பற்றியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

தீயணைப்பு வீரா்கள் மேலும் தீ பரவவிடாமல் தடுத்ததால் சேதம் தவிா்க்கப்பட்டது. பெரியக்கடை போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பற்றியதாக தெரிய வந்துள்ளது.