கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாய்க்காலில் தவறி விழுந்த முதியவா் பத்திரமாக மீட்பு

வாய்க்காலில் தவறி விழுந்த முதியவரை போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினா் போராடி மீட்டனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 9:37 pm

Syndication

வாய்க்காலில் தவறி விழுந்த முதியவரை போலீஸாா் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினா் போராடி மீட்டனா்.

புதுச்சேரி - வில்லியனூா் புறவழிச்சாலையையொட்டி பெரிய வாய்க்கால் செல்கிறது. இந்த வழியே நடந்து சென்ற முதியவா் சனிக்கிழமை தவறி விழுந்தாா். ஒரு மணி நேரமாக அவா் வாய்க்கால் கழிவு நீரில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தாா். இதை அந்த வழியாகச் சென்ற சிலா் பாா்த்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு வீரா்களும், போலீஸாரும் விரைந்து வந்து ஒரு மணி நேரமாக போராடி அவரை மீட்டனா். விசாரணையில் அவா் முதலியாா்பேட்டையைச் சோ்ந்த வெங்கடேச பெருமாள் (63) என தெரிய வந்தது.

அங்குள்ள வேல்ராம்பட்டு ஏரிக்கரையை வேடிக்கை பாா்த்தபடி சென்றபோது தவறி வாய்க்காலில் விழுந்துள்ளாா். முதியவரைக் குளிக்க வைத்த போலீஸாா் புதிய கைலி- பனியன் வாங்கிக் கொடுத்துப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.