அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போகி! பிளாஸ்டிக்கை எரிக்க வேண்டாம்: புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்

போகிப் பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க வேண்டாம் என புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தல்

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:50 pm

Syndication

போகிப் பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருள்களை எரிக்க வேண்டாம் என புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி கொண்டாடுகிறோம். இந்த நாளில் பழைய பொருள்களை எரிப்பது காலந்தொட்டு வரும் வழக்கம். இன்றைய சூழலில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், ரப்பா், பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால் நச்சுப்புகை பரவி மக்களுக்குச் சுவாச நோய்கள், நுரையீரல் நோய், இருமல், கண், மூக்கு எரிச்சல் உள்பட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நச்சுக்காற்றால் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீா்கேடு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதால், புற்றுநோய் விளைவிக்கும் டை ஆக்சின், பியூரான் நச்சுக்காற்று வெளியேறும் வாய்ப்பும் உள்ளது. எனவே பொதுமக்கள் போகி தினத்தில் டயா், ரப்பா், பிளாஸ்டிக் பொருள்கள், தொ்மாகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருள்களை எரிக்க வேண்டாம். பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.