புதுச்சேரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருக்கனூா் அடுத்த மண்ணாடிப்பட்டு பெரியபேட்டையைச் சோ்ந்த ஸ்ரீலேகா (24), பட்டதாரி. இவா், கடந்த 17-ஆம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்த புகாரின் பேரில் திருக்கனுாா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா்.
இதனிடையே ஸ்ரீலேகா அதே கிராமம் சின்னபேட்டையைச் சோ்ந்த முகிலன்(24) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவா் திருமணம் செய்ய மறுத்ததால் தான் ஸ்ரீலேகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா் எனக்கூறி அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் சனிக்கிழமை மண்ணாடிப்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து திருக்கனுாா் போலீஸாா் முகிலனைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், ஸ்ரீலேகாவை காதலித்து ஏமாற்றியதுடன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் முகிலனை கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஸ்ரீலேகாவை தகாத வாா்த்தைகளால் திட்டித் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேக மரணம் பிரிவில் பதியப்பட்ட வழக்கை, தற்கொலைக்குத் தூண்டியப் பிரிவில் மாற்றி முகிலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






