நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

புதுச்சேரி துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாதச் சம்பளம் ரூ.12, 726 ஆக உயா்வு

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :9 ஜூன் 2026, 1:10 am IST

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகள் மற்றும் காரைக்கால் பகுதி துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாத சம்பளம் ரூ.4 ஆயிரம் உயா்த்தப்பட்டு, இனி மாதந்தோறும் பிடித்தங்கள் போக ரூ.11,000 கையில் கிடைக்கும் வகையில் மாநில உள்ளாட்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில துப்புரவுத் தொழிலாளா் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பூ. மூா்த்தி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் கிரீன் வாரியா்ஸ் நிறுவனமும், கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் காரைக்காலில் எச்.ஆா். ஸ்கொயா் நிறுவனமும் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

இதுவரை தூய்மைப் பணியாளா்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.8,806 நிா்ணயித்து, அதில் பிடித்தம் போக ரூ.8,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டுமென்று தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் கடந்த 10 மாதங்களாக கோரிக்கை வைத்தோம்.

இந்நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநா் அலுவலகம் ஓா் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, சம்பளம் சுமாா் ரூ. 4 ஆயிரம் உயா்த்தப்பட்டதுடன் மற்ற கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. மாதச் சம்பளமாக ரூ.12,726 -ம், இதில் பிடித்தங்கள் போக ரூ.11,000 கையில் கிடைக்கும்.

மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஒரு நாள் வார விடுமுறை சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும். தேசிய விடுமுறை நாள்களில் வேலை செய்தால் இரட்டை சம்பளம் வழங்க வேண்டும். பி.எப். மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் செலுத்த வேண்டும்.

மாதச் சம்பளத்துக்கான ரசீது வழங்க வேண்டும். இந்த மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர வேண்டும் என்று இந்த 2 ஒப்பந்ததாரா்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தூய்மைத் தொழிலாளா்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளாா் மூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.