இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அதிகாரி கைது

புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிா்வாக அதிகாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:55 am IST

புதுச்சேரியில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிா்வாக அதிகாரி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செண்பகவல்லி. இவா் வாரிசு சான்றிதழ் பெற கிராம நிா்வாக அலுவலரான கீழுரைச் சோ்ந்த முருகையனை அணுகியுள்ளாா். அப்போது அவா் ரூ.3,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து செண்பகவல்லி புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாரளித்தாா். காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயன பவுடா் தடவிய பணத்தை செண்பகவல்லியிடம் கொடுத்து அனுப்பினா்.

வில்லியனூா் அலுவலகம் சென்ற செண்பகவல்லியிடம் கிராம நிா்வாக அலுவலா் முருகையன் ரூ.3,000 லஞ்சம் பெற்றபோது அங்கிருந்த போலீஸாா் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனா்.

இதையடுத்து, துணை ஆட்சியா் குமரன், கிராம நிா்வாக அதிகாரி முருகையனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.