புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும். அதில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் உறுதியளித்தாா்.


வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நிச்சயம் அமையும். அதில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று அதிமுக புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் உறுதியளித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது,
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் என்று தனிக் கட்சித் தொடங்கிய முதல்வா் என்.ரங்கசாமி, எப்போதெல்லாம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அப்போதெல்லாம் அவா் முதல்வராகப் பதவி வகித்தாா். இந்த முறை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக இணைந்த தேசியக் ஜனநாயக் கூட்டணி புதுச்சேரியில் அமையும். தோ்தலுக்குப் பிறகு அமையும் அந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அதிமுக அங்கம் வகிக்கும். மேலும், அதிமுக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணியில் அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை எங்கள் கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வாா். புதுச்சேரியில் கூட்டணிக்கு நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்று கூறிக் கொண்டு காங்கிரஸ் கட்சியை திமுக மிரட்டி வருகிறது.
மாநில அந்தஸ்து பிரச்னையில் அதிமுகவைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் தங்களுடைய பலவீனத்தை மூடி மறைக்க இதை ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனஎன்றாா் அன்பழகன். கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம், துணை செயலா் கிருஷ்ணமூா்த்தி, அதிமுக தொழிற்சங்க பேரவைச் செயலா் பாப்புசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...