அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 9:01 pm

புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, 5 ஆய்வாளா்கள், 8 உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்நிலையில் காவல் துறை கண்காணிப்பாளா்கள் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி பிஏபி கமாண்டன்ட், சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பிரிவு எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி எஸ்.பி. பழனிவேல் காரைக்கால் வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் பேரில் தலைமைச் செயலா் சரத் சௌகான் சனிக்கிழமை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.