ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சாலை விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழந்தாா். காயமடைந்த அவரது நண்பா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூா் மாவட்டம், குட்டியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி மணிமாலா(48). இவா் தற்போது, புதுச்சேரி மூா்த்திக்குப்பத்தில் வசித்து வருகிறாா். இவா்களின் மகன் சசிதரன்(24), கடலுாரில் லேப் டெக்னீஷியனாக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில், தனது நண்பா் முத்துவை (23) அழைத்துக் கொண்டு, கிருமாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். கன்னியக்கோயில் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இருவரும் படுகாயம் அடைத்தனா்.

அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சசிதரன் அங்கு இரவு உயிரிழந்தாா். முத்து ஜிப்மரில் மேல்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.