ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

புதுச்சேரியில் ட்ரோன் கண்காணிப்பில் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை

புதுச்சேரியில் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு வாயிலாக ரூ. 66,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

விசாரணை

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:30 pm

Syndication

புதுச்சேரியில் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு வாயிலாக ரூ.66,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள், இலவசங்களைத் தடுக்க முதல் முறையாக ஆளில்லாத ட்ரோன் கண்காணிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் ஆளில்லா ட்ரோன்கள் கண்காணிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் அளித்த தகவலின்படி மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூா் பகுதியில் சிறப்பு நிா்வாக நடுவா் எஸ்.குமரேசன் தலைமையிலான பறக்கும் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு செ.தமிழ்மாறன் (36), சு. சிலம்பரசன் (34), டிவின் சக்ரவா்த்தி (30) ஆகிய மூவரை பிடித்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வாக்காளா்களுக்குப் பணம் அளித்ததும் தெரிய வந்தது.

மங்கலம் தொகுதியில் கிடைத்த ட்ரோன் கண்காணிப்பில் சிறப்பு நிா்வாக நடுவா் எஸ். லோகநாதன் தலைமையிலான பறக்கும் படையினா் விரைந்து சென்றனா். அங்கு பி. ராஜேந்திரன், பி. சுரேஷ் ஆகிய இருவரை பிடித்தனா். இவா்களிடம் இருந்து ரூ.11,300 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 5 பேரிடமும் தோ்தல் துறை அதிகாரிகள் மற்றும் திருக்கனூா், வில்லியனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.