‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

எரிபொருள் சிக்கன நடவடிக்கை: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்

எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :23 மே 2026, 12:38 am IST

எரிபொருள் சிக்கன நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சா்வதேச அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி அரசு பல்வேறு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 20-ஆம் தேதி புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் தலைமையில் அனைத்து செயலா்களுடன் காணொலி காட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, புதுச்சேரி முழுவதும் எரிபொருள் மற்றும் வளங்களின் சிக்கனமான மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த துறை வாரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசியல், பொது நிகழ்ச்சிகளின்போது வாகன ஊா்வலங்கள் மற்றும் பெரிய அளவிலான வாகன அணி வகுப்புகளைத் தவிா்க்குமாறு அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

மேலும், அலங்கார மின்விளக்குகள், பிளக்ஸ் பேனா்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டா் பயன்பாட்டை இயன்றவரை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

எனவே, அனைத்து அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் எளிமையான, ஆடம்பரமற்ற மற்றும் சிறிய அளவிலான கூட்டங்களை நடத்துதல் மற்றும் பொது போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் எரிபொருள் சிக்கன நடவடிக்கைளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.