பழுதாகி சாலையில் நின்ற மணல் லாரி போக்குவரத்து பாதிப்பு
திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் மணல் லாரி திடீரென பழுதாகி சாலையின் நடுவில் நின்றதால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் மணல் லாரி திடீரென பழுதாகி சாலையின் நடுவில் நின்றதால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கோவிலூரை அடுத்த வடக்குநெமிலி தென்பெண்ணையாற்றில் உள்ள அரசு குவாரியில் இருந்து, மணல் ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, அரகண்டநல்லூர் கடைவீதியில் சாலையின் நடுவில் திடீரென பழுதாகி நின்றது.
இதனால், எந்தப் பக்கமும் ஒதுங்க வழியில்லாமல் போனதால், வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...