டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச் சங்கிலி

விழுப்புரத்தில் 15-ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர்  திங்கள்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 10:02 am IST

விழுப்புரத்தில் 15-ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழக கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர்  திங்கள்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய  இணைய தள  வசதி,  மாவட்ட மாறுதல் ஆணை உள்ளிட்ட  21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
விழுப்புரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு வட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார்.  அன்பழகன்,  மணிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மாவட்ட செயலாளர் எஸ்.புஷ்பகாந்தன் கோரிக்கை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.  
முன்னாள் மாநில நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பரமானந்தம் வாழ்த்துரை வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகோத்தபடி மனிதச் சங்கிலியாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களிட்டனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்டங்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மனிதச்சங்கிலி போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பெ.பெரியாப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் த.பெரியதமிழன், வட்டத் தலைவர்கள் பெ.முருகன், ஜெ.ரஞ்சித்குமார், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
வட்ட செயலாளர் மா.வரதராஜன், வட்ட பொருளாளர் அ.வினோத், வட்டத் தலைவர் மு.கருணாநிதி மற்றும்  பர்கத்துனிஸா, அலமு, வசந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.