கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடிய விசாரணைக் கைதி புதன்கிழமை பிடிபட்டார்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் மா.ராஜா, போலீஸாருடன் புதன்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, பேருந்து நிலைய எம்.ஜி.ஆர், அண்ணா சிலையின் பின்புறம் உள்ள கோயிலில் உட்கார்ந்திருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் சங்கராபுரம் மோதல் வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய விசாரணைக் கைதியான சங்கராபுரம் அருகே க.செல்லம்பட்டைச் சேர்ந்த கல்வி அவதாரம் மகன் செல்வராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

