4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தப்பியோடிய கைதி பிடிபட்டார்

கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடிய விசாரணைக் கைதி புதன்கிழமை பிடிபட்டார்.

Updated On :29 மார்ச் 2018, 3:18 am

கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடிய விசாரணைக் கைதி புதன்கிழமை பிடிபட்டார்.
 கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் மா.ராஜா, போலீஸாருடன் புதன்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, பேருந்து நிலைய எம்.ஜி.ஆர், அண்ணா சிலையின் பின்புறம் உள்ள கோயிலில் உட்கார்ந்திருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
 அதில், அவர் சங்கராபுரம் மோதல் வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய விசாரணைக் கைதியான சங்கராபுரம் அருகே க.செல்லம்பட்டைச் சேர்ந்த கல்வி அவதாரம் மகன் செல்வராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.