ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புதுவை அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல்: தனியார் பேருந்து ஊழியர்கள் 5 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் அருகே புதுவை அரசுப் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :26 மே 2019, 5:34 am IST

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் அருகே புதுவை அரசுப் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து காலாப்பட்டு வரை செல்லும் புதுவை மாநில அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல காலாப்பட்டு 
சென்றுவிட்டு, புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது, இடையே தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் அருகே பேருந்து சென்றபோது, சாலையோரம் மறைந்திருந்த சிலர் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், அரசுப் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. ஓட்டுநர் காத்தவராயன் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பேருந்தின் நடத்துநரான புதுவை கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தபோது, புதுச்சேரியிலிருந்து இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்து ஊழியர்களுக்கும், அதே தடத்தில் இயக்கப்பட்ட புதுச்சேரி தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் இடையே பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக விரக்தியிலிருந்த தனியார் பேருந்து ஊழியர்கள், அரசுப் பேருந்தின் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரி தனியார் பேருந்து ஓட்டுநரான கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (38), நடத்துநர் கார்த்திகேயன் (29), புதுச்சேரி காலாப்பட்டைச் சேர்ந்த பேருந்து உதவியாளர் சௌந்தர் (25), புதுவை சேந்தநத்தத்தைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (30) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.