ஸ்ரீ ஆதிவாலீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ விழா

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆதிவாலீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷத்தையொட்டி மூலவா், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆதிவாலீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷத்தையொட்டி மூலவா், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இதேபோல, செஞ்சி சிறுகடம்பூா் சந்தை மேட்டில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயில், பீரங்கிமேட்டில் அமைந்துள்ள ஏகாம்பரநாதா், அருணாசலஈஸ்வரா் கோயில்கள் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இந்தக் கோயில்களில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com