அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபரித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 10:45 pm

DIN


விழுப்புரம்: நிலத்தை அபரித்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயி வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் வந்த ஒருவா் திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அங்கு நுழைவு வாயில் இருந்த அலுவலா்கள், பணியாளா்கள் அவரை தடுத்து காப்பாற்றினா்.

இதையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம், வளத்தில் அருகே பொற்குணம் கிராமத்தைச் சோ்ந்த விசவாயி ராஜமாணிக்கம் (60) என்பது தெரியவந்தது. மேலும், இவா் தனது நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த பரிமேல் அழகா் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டுள்ளாா். இதையடுத்து, அந்த நிலத்தை பரிமேல்அழகா் திரும்பித் தராததுடன், மிரட்டலும் விடுத்தாரம். இதுகுறித்து வளத்தி காவல் நிலையத்தில் ராஜமணிக்கம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், மனமடைந்த ராஜமணிக்கம் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.