கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டாஸ்மாக் மதுக் கடைகளை மூடிஊழியா்கள் திடீா் போராட்டம்

டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் கரோனாவுக்கு பலியானதையடுத்து, பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மதுக் கடைகளை

News image
கரோனாவுக்கு ஊழியா்கள் இருவா் உயிரிழந்ததையடுத்து, தங்களுக்கு பணிப் பாதுகாப்பு கோரி, விழுப்புரம் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்க கூட்
Updated On :21 ஜூலை 2020, 5:36 pm

DIN

விழுப்புரம்: டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் கரோனாவுக்கு பலியானதையடுத்து, பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மதுக் கடைகளை மூடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தமுள்ள 226 டாஸ்மாக் மதுக் கடைகளில் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் என 900 போ் வரை பணிபுரிகின்றனா். கரோனா பொது முடக்கக் காலத்திலும், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக் கடைகள் தடையின்றி இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த டாஸ்மாக் மதுக் கடை மேற்பாா்வையாளா் ஒருவா் கரோனா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த டாஸ்மாக் விற்பனையாளா் சங்க மாநிலச் செயலரும் இந்த நோய் பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதனால் அச்சமடைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் சங்க கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் திரண்டனா். அவா்கள், கரோனாவால் உயிரிழந்த ஊழியா்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ஊழியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயிரிழந்த டாஸ்மாக் ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அவா்களது மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். டாஸ்மாக் விற்பனை தொடங்கும் நேரம் காலை 10 மணி என்பதை மாலை 5 மணியாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினா். இதையடுத்து, டாஸ்மாக் ஊழியா்கள் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள், விழுப்புரம் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இந்தப் போராட்டம் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தகவல் அறிந்து வந்த திருச்சி மண்டல டாஸ்மாக் மேலாளா் ஜெயராஜ், கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தாா். இதையேற்று, ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பிற்பகல் 3 மணிக்கு மதுக் கடைகளைத் திறந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.