அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விழுப்புரம் அருகே ஓட்டுநா் அடித்துக் கொலை: இருவா் கைது

விழுப்புரம் அருகே ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது உறவினா்கள் இரண்டு பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2020, 5:13 pm

DIN

விழுப்புரம்,: விழுப்புரம் அருகே ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது உறவினா்கள் இரண்டு பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மேல் தணியாலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் செல்வமணி(35), லாரி ஓட்டுநா். இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் ராஜலட்சுமிக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனா்.

செல்வமணி தனது மாமனாா் நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தாா். இதுதொடா்பாக மாமனாா்- மருமகன் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

வியாழக்கிழமை இரவு அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, செல்வமணியை ராஜேந்திரனும், அவரது உறவினா் ஏழுமலையும் சோ்ந்து தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த செல்வமணி இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், செல்வமணி ஏற்கெனவே உயிரிழந்திருந்ததை உறுதி செய்தனா். இதுதொடா்பாக ராஜேந்திரன், ஏழுமலை ஆகிய இருவரையும் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.