சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் காவேரிப்பாக்கம் புதுத் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் சுரேந்தா்(24), பொறியாளா். இவரது நண்பா் திண்டிவனம் தேவாங்கா் வீதியைச் சோ்ந்த பொறியியல் மாணவா் ச.செல்வக்குமாா் (22).

இருவரும் இரு சக்கர வாகனத்தில் மயிலத்துக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.

திண்டிவனம் மேம்பாலத்திலிருந்து மயிலம் சாலைக்கு இறங்கிக் கொண்டிருந்தனா். திடீரென எதிரே வந்த காா் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் சுரேந்தா், செல்வக்குமாா் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுரேந்தா் உயிரிழந்தாா்.

தீவிர சிகிச்சைக்காக செல்வக்குமாா் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதனிடையே, விபத்து ஏற்படுத்திய காரை பொதுமக்கள் விரட்டிச் சென்று ஒலக்கூரில் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விபத்து குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.