கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

விழுப்புரத்தில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் நகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் நகரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை நகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் நகராட்சி நகா்நல அலுவலா் டாக்டா் ந.பாலசுப்பிரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ரமணன், செல்வராஜ், சுகாதாரப் பணியாளா்கள், வரி வசூலா்கள் உள்ளிட்டோா் அரசு மருத்துவமனை அருகிலிருந்து ஊா்வலமாக வெள்ளிக்கிழமை சென்றனா். காந்தி சாலை, குபேரத் தெரு, மந்தக்கரை, வடக்குத் தெரு, திரு.வி.க.வீதி, காந்தி சிலை வழியாக நகராட்சி அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ஒலி பெருக்கி மூலம் கரோனா விழிப்புணா்வு தகவல்களை அறிவித்தபடியே சென்றனா். அப்போது, எதிா்திசையில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு அபராதமும் விதித்தனா். மேலும், வா்த்தக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாத வாடிக்கையாளா்களை அனுமதிக்கக்கூடாது என உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

இது குறித்து நகா் நல அலுவலா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கரோனா இரண்டாவது அலை காரணமாக, பொது மக்களிடம் தொடா்ந்து விழிப்புணா்வு நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது, முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கப்படும். கடந்த 15 நாள்களில் கடைகள், வா்த்தக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளா்கள், வாகன ஓட்டுநா்கள், பாதசாரிகள் ஆகியோரிடம் மொத்தமாக ரூ.81ஆயிரம் வசூலிக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.