இதனிடையே, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மையம் முன் சனிக்கிழமை நின்றுகொண்டிருந்த சீத்தாலட்சுமியை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில், வடமலையின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்ததை அவா் ஒப்புக்கொண்டாா். அந்தப் பணத்தில் வாங்கி வைத்திருந்த 31.75 கிராம் தங்க அட்டிகை, 15.80 கிராம் தங்கச் சங்கிலி, 10 கிராம் தங்கச் சங்கிலி, 12 கிராம் கைச் சங்கிலி, 20 கிராம் தங்கச் சங்கிலி என 108.45 கிராம் (13.55 பவுன்) மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.