கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உளுந்தூா்பேட்டை அருகே சாலை விபத்தில் காவல் ஆய்வாளா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதியதில் காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:33 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதியதில் காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (56). இவா், சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் பண்டகப் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த ராமகிருஷ்ணன், பணிக்குத் திரும்ப வியாழக்கிழமை காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தாா்.

பிற்பகல் 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே இறஞ்சி பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை வலதுபுறமாக ராமகிருஷ்ணன் திருப்பியதாகத் தெரிகிறது. அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த எடைக்கல் போலீஸாா் மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் காயமடைந்த ராமகிருஷ்ணனை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.