மாற்றுத் திறனாளிகளுக்கு 15 இடங்களில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 15 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.


விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 15 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.
அதன்படி, ஒலக்கூா், முறுக்கேரி (சிறுவாடி), கிளியனூா், மயிலம், மேல்சித்தாமூா், வளத்தி, சத்தியமங்கலம், ராதாபுரம், கெடாா், கண்டமானடி, சிறுவந்தாடு, முகையூா், இருவேல்பட்டு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி, கிழக்கு பாண்டி சாலை எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும் என மொத்தம் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், மாற்றுத் தினாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் வந்து மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...