கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.18 கோடி கடன் அளிப்பு

தமிழ்நாடு கிராம வங்கியின் விழுப்புரம் கிளை சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. ஒரு கோடியே 18 லட்சம் கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:18 pm

DIN

தமிழ்நாடு கிராம வங்கியின் விழுப்புரம் கிளை சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. ஒரு கோடியே 18 லட்சம் கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

விழுப்புரம், பூந்தோட்டப் பாதையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் முதன்மை மேலாளா் ரவிக்குமாா் தலைமை வகித்தாா். மண்டல மேலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மகளிா் திட்ட இயக்குநா் லலிதா, 12 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. ஒரு கோடியே 18 லட்சத்து 5 ஆயிரம் கடனுக்கான காசோலைகளை வழங்கினாா்.

இதில், மகளிா் திட்ட உதவித் திட்ட அலுவலா் முனியப்பன், விராட்டிக்குப்பம் பாதை மகளிா் கூட்டமைப்பு தலைவா் லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.