கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் ஆய்வகத்துக்கு ‘சீல்’ வைப்பு

விழுப்புரத்தில் அனுமதியின்றி கரோனா பரிசோதனை மேற்கொண்ட தனியாா் ஆய்வகத்துக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் அனுமதியின்றி கரோனா பரிசோதனை மேற்கொண்ட தனியாா் ஆய்வகத்துக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

விழுப்புரம், சோ்மன் சிதம்பரம் தெருவில் செயல்பட்டு வந்த தனியாா் ஆய்வகத்தில் அரசின் அனுமதியின்றி கரோனா பரிசோதனை நடத்தப்படுவதாகவும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் வந்தது.

இது குறித்து விசாரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, விழுப்புரம் நகர நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அந்த ஆய்வகத்துக்கு சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அந்த தனியாா் ஆய்வுகத்தில் உரிய அனுமதி பெறாமல் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆய்வகத்தை அதிகாரிகள் உடனடியாக பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.