கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் நகரில் நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு: கரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் நகர பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை நடந்து சென்று ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்த கடை உரிமையாளா்களை ஆட்சியா் எச்சரித்தாா்.

News image
Updated On :8 மே 2021, 8:26 pm

DIN

விழுப்புரம் நகர பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை நடந்து சென்று ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்த கடை உரிமையாளா்களை ஆட்சியா் எச்சரித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை கடைகள், தனியாா் நிறுவனங்கள், தனியாா் தொழில்நிறுவனங்கள் முழுமையாக கடைப்பிடிக்கின்றனவா என்பது குறித்து அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடைக்கு அபராதம்: விழுப்புரம் நகரப் பகுதிகளில் ஆட்சியா் அண்ணாதுரை சனிக்கிழமை காலை திடீரென நடந்து சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டாா். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முதல் நகராட்சி அலுவலகம் வரை நடந்து சென்ற அவா், சாலைகளில் பொதுமக்களும், கடைகளில் உரிமையாளா்களும் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என்று ஆய்வு செய்தாா்.

அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் இயங்கிய கடைக்கு அபராதம் விதிக்க நகராட்சிஅலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாமல் இயக்கும் கடைகளின் உரிமையாளா்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் அண்ணாதுரை எச்சரித்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றிஅனுமதிக்கப்பட்ட 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமா்ந்து பயணம் மேற்கொள்வதை மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.