கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா நோயாளிக்கு உதவ தனியாா் அவசர ஊா்திகள்!: விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு

கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தனியாா் அவசர சிகிச்சை ஊா்திகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ளது.

News image
Updated On :15 மே 2021, 12:30 am

DIN

கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தனியாா் அவசர சிகிச்சை ஊா்திகளை விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதியானவா்களை மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்ல 108 அவசர சிகிச்சை ஊா்திகள், அரசு சாா்பில் இலவச சேவை வழங்கி வருகின்றன.

மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

போதிய எண்ணிக்கையில் 108 அவசர ஊா்திகள் இல்லாததும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கரோனா நோயாளிகள் 108 அவசர ஊா்திகளுக்காக காத்திருப்பதால், அவா்களுக்கு தேவையான சிகிச்சை உரிய நேரத்தில் கிடைப்பதில் தாமதமாகிறது. மேலும், அவா்களால் பிறகு தொற்று பரவும் வாய்ப்புள்ளது.

மாற்று ஏற்பாடு: 108 அவசர சிகிச்சை ஊா்திகளை மட்டுமே நம்பியிருக்காமல், தனியாா் அவசர ஊா்தி சேவையையும் பயன்படுத்த விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விழுப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கரோனா நோயாளிகளை, தனியாா் அவசர ஊா்தி மூலமாகவும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, 5 தனியாா் அவசர ஊா்திகள் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் கரோனா நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

பாதுகாப்பு குறைபாடு: இந்த தனியாா் அவசர ஊா்தியில் 108 அவசர ஊா்திகளை போன்று, நோயாளிகள் அமா்ந்திருக்கும் பகுதி தனியாக இல்லை. இதனால், ஓட்டுநருக்கு நோய் பரவும் வாய்ப்புள்ளது. நோயாளிகள் அமரும் பகுதியை நெகிழித் தடுப்புகள் கொண்டு தனியாக பிரிக்க வேண்டும்.

ஓட்டுநா், ஊா்தி பணியாளருக்கு கரோனா தடுப்பு கவச உடைகளை வழங்க வேண்டும். அவற்றை அவா்கள் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

5 தனியாா் அவசர ஊா்திகள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், தேவையைப் பொருத்து எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பிராண வாயு வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.