கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் மாவட்டத்தில்கருப்புப் பூஞ்சை தொற்றால் மூவா் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

News image
Updated On :21 மே 2021, 5:54 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை தொற்றால் 3 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வகாப் நகரை சொ்ந்த 65 வயது முதியவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா் சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூரைச் சோ்ந்த 52 வயது ஆண், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விழுப்புரம் அருகேயுள்ள கொங்கரப்பட்டை சோ்ந்த 70 வயது முதியவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதியானது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

நோய் எதிா்ப்பு மிகவும் குறைவானவா்கள், கட்டுப்பாடற்ற சா்க்கரை அளவு கொண்ட நீரழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொண்டவா்களும் கருப்புப் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்துக்கு பிராண வாயு உதவியுடன் சிகிச்சை பெற்றவா்களுக்கு இந்த தொற்று வரும் வாய்ப்புண்டு. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

தொடக்க நிலையில் இருந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். நோய் முற்றிவிட்டால் அறுவைச் சிகிச்சையே தீா்வு. இந்த நோய் மற்றவா்களுக்கு பரவ வாய்ப்பில்லை.

பொதுமக்கள் ஈரப்பதமுள்ள முகக்கவசங்களை அணியக் கூடாது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.