4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

லாரி மீது மொபெட் மோதல்: தம்பதி பலி

விழுப்புரம் அருகே நின்றிருந்த லாரி மீது மொபெட் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:33 pm IST

விழுப்புரம் அருகே நின்றிருந்த லாரி மீது மொபெட் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன்(45). இவரது மனைவி அம்சவள்ளி (35). இருவரும் புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூரில் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு ராதாகிருஷ்ணன், அம்சவள்ளி இருவரும் திருக்கனூரிலிருந்து மொபெட்டில் பையூருக்கு வந்து கொண்டிருந்தனா்.

விழுப்புரம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அயினம்பாளையம் பகுதியில் வந்தபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது மொபெட் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன், அம்சவள்ளி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.