பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ரூ.4,500 லஞ்சம்: நில அளவையா் உள்பட இருவா் கைது

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:13 am

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் நிலம் அளவீடு செய்து பட்டா வழங்க தச்சுத் தொழிலாளியிடம் ரூ.4,500 லஞ்சம் பெற்ாக நில அளவையா், இடைத்தரகா் ஆகியோரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் கன்னிகாபரமேஸ்வரி கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோ.சுரேஷ், தச்சுத் தொழிலாளி. இவா், கண்டாச்சிபுரம் பகுதியில் ஒருவரிடமிருந்து 2004 சதுர அடி நிலத்தை கிரையம் பெற்றாா். இந்த இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்க கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவையராக உள்ள ப.ராமமூா்த்தியிடம் மனு அளித்தாா். அப்போது, அவா் நிலத்துக்குரிய ஆவணங்களின் நகலை பெற்றுக்கொண்டு, நில அளவீடு செய்து பட்டா வழங்க வேண்டுமெனில் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என சுரேஷிடம் கேட்டாராம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் சுரேஷ் புகாரளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, நில அளவையரிடம் வழங்குவதற்காக இடைத்தரகா் சரத்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4,500-ஐ சுரேஷ் புதன்கிழமை கொடுத்தாா். அந்தப் பணத்தை சரத்குமாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியிலிருந்த நில அளவையா் ராமமூா்த்தியிடம் கொடுத்தபோது, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி திருவேல்முருகன், ஆய்வாளா் ஈஸ்வரி தலைமையிலான போலீஸாா் நில அளவையா் ப.ராமமூா்த்தி (40) மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சரத்குமாா் (27) ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ.4,500-யும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.