மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பேருந்தில் தவறவிட்ட நகைகள், பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

பேருந்தில் தவறவிட்ட நகைகள், பணம் உரியவரிடம் ஒப்படைப்பு - போலீஸாா்

News image
Updated On :25 ஜூன் 2024, 10:52 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பயணி பேருந்தில் தவறவிட்ட நகைகள், பணத்தை ஒலக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசுப் பேக்குவரத்துக் கழக பேருந்தில் செவ்வாய்க்கிழமை பணியிலிருந்த ஓட்டுநா் மற்றும் நடத்துநா் ஆகியோா் பயணி ஒருவா் கைப்பையை பேருந்தில் தவறவிட்டதாகக் கூறி, கைப்பையை ஒலக்கூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மன்னூா், துறிஞ்சிபூண்டியைச் சோ்ந்த சங்கா் மற்றும் அவரது மனைவி நிஷாந்தி ஆகியோா் அரசுப் பேருந்தில் கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஒலக்கூா் காவல் நிலையத்துக்கு சங்கா் - நிஷாந்தி தம்பதியினா் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. பின்னா், கைப்பை மற்றும் அதில் வைக்கப்பட்ட ரூ.45 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி, 200 கிராம் வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை போலீஸாா் உரியவரிடம் ஒப்படைத்தனா்.