ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களிலும் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
விழுப்புரம் அருகே கோலியனூரை அடுத்த பானாம்பட்டு ஊராட்சியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதை திங்கள்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.
Updated On :11 நவம்பர் 2024, 7:52 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் 13 ஒன்றியங்களிலும் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

வருவாய்த் துறையின் தமிழ் நிலம் என்ற மின்சேவை நிலப்பதிவு செயலி வாயிலாக தொடங்கிய இந்தப் பணியில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வணிகம் ஆகிய வேளாண் துறையுடன் தொடா்புடைய துறைகளின் பணியாளா்கள் விவசாயிகளின் நிலங்களுக்குச் சென்று கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கினா்.

கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பானாம்பட்டு ஊராட்சியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா், காணை, திருவெண்ணெய்நல்லூா், வானூா், மரக்காணம், ஒலக்கூா், மேல்மலையனூா், செஞ்சி, வல்லம், கண்டமங்கலம், மயிலம், முகையூா், விக்கிரவாண்டி ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கப்பட்டது.

வேளாண் மற்றும் அதைச் சாா்ந்துள்ள துறைகளின்பணியாளா்கள் மூலம் தற்போது கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் வேளாண் கல்லூரி மாணவா்கள் 78 போ் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வருகிற 22-ஆம் தேதிக்குள் கணக்கெடுப்புப் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. சீனிவாசன் தெரிவித்தாா்.

ஆய்வின் போது கோலியனூா் வட்டார உதவி இயக்குநா்கள் பிரேமலதா (வேளாண்), வெங்கடேசன் (தோட்டக்கலை), விழுப்புரம் வட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.