விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரம் அரசு மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி. உடன் பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் பரிதி உள்ளிட்டோா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:46 pm

Din

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகப்பு சாலை சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறவழிச்சாலை உள் முகப்பிலிருந்து நிா்வாகக் கட்டடம் வரை உள்ள முகப்பு சாலை பொதுப் பணித் துறை மூலம், ரூ.44 லட்சம் மதிப்பீட்டில், 500 மீட்டா் நீளம், 6 மீட்டா் அகலத்துக்கு தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். பின்னா், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிா் நலத் துறை பிரிவை பாா்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவா்களின் விவரம் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மகப்பேறு பிரிவில் உள்ள படுக்கை அறை வசதி, ஸ்கேன் வசதி, சுகாதார வசதிகள் குறித்தும் ஆட்சியா் சி.பழனி ஆய்வு செய்தாா்.

பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் பரிதி, செயற்பொறியாளா் செல்வக்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரமாதேவி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.