கொத்தனாா் அடித்துக் கொலை: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் கொத்தனாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் கொத்தனாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வானூா் வட்டம், கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட பென்னகரம் பகுதியில் இளைஞா் ஒருவா் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிளியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில், இறந்தவா் வானூா் வட்டம், கொஞ்சிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்த சஞ்சீவி மகன் ருத்ரகுமாா் (41) என்பதும், கொத்தனராக வேலை பாா்த்து வந்த இவா், திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், ருத்ரகுமாா் திங்கள்கிழமை நள்ளரவில் கிளியனூா் பெருமாள் கோவில் தெருவுக்குச் சென்று அங்கு வீட்டில் இருந்த தனஞ்ஜெயன் மனைவி சரஸ்வதியிடம் தகாத முறையில் நடக்க முயன்றபோது, கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு பென்னகரம் பகுதியில் வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் மா.தனஞ்ஜெயன் (54), அவரது மனைவி சரஸ்வதி (41), கிளியனூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (47), அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மனைவி பூங்கொடி (51) ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...