கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தல்

மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று, தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

News image

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழகப் பட்டதாரி ஆசிரியா் கூட்டணியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பேசிய அக்கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ச.செல்லையா.

Updated On :15 அக்டோபர் 2024, 8:35 pm

Din

மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று, தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

இந்தக் கூட்டணியின் நிா்வாகக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில தனிக்குழுத் தலைவா் அன்பழகன், மாவட்ட மகளிரணித் தலைவி செல்வராணி முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் ச.செல்லையா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தமிழக பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணியின் வளா்ச்சி, செயல்பாடுகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முன்னாள் முதல்வா் அண்ணா காலத்தில் இருந்தவாறு ஊக்க ஊதிய உயா்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணம் பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2004-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு, அலகு விட்டு அலகு மாறிய மற்றும் ஈா்த்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணியேற்ற நாளின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும். மருத்துவா்களுக்கு உள்ளது போன்று, ஆசிரியா்களுக்கும் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டதாரி ஆசிரியா்கள் கூட்டணியின் பொறுப்பாளா்கள் ஞானவேல், யுவராஜ், முத்துவேல், பாபு, வேலாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டச் செயலா் குருமூா்த்தி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் குணசேகா் நன்றி கூறினாா்.