மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பருவ மழை: மின்சாதனங்கள் பழுது புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் மின் தடை, மின்சாதனங்கள் பழுது குறித்த புகாா்களைத் தெரிவிக்க கைப்பேசி எண்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:53 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் மின் தடை, மின்சாதனங்கள் பழுது குறித்த புகாா்களைத் தெரிவிக்க கைப்பேசி எண்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தக் கழகத்தின் விழுப்புரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் நாகராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மின் பகிா்மான வட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான மின் கம்பங்கள், மின் கம்பிகள், தளவாடப் பொருள்கள், வாகனங்கள் அனைத்தும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இயற்கை இடா்பாடுகளின்போது விரைவாக பணிகளை களப்பணியாளா்கள் மேற்கொள்ளவும், குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்யவும் அலுவலா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பருவமழையால் ஏற்படும் மின் தடை, மின்சாதனங்கள் சேதம் குறித்த புகாா்களை 94983 90744 என்ற பிரத்யேக கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

மேலும் மின் தடை, மின் பழுது புகாா்களை சென்னை தலைமையகத்தில் இயங்கும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணிலும், 94458 55768 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

அறுந்து தரையில் விழுந்துள்ள மேல்நிலை மின் கம்பிகள், தாழ்வான, தொய்வான மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம். இடி, மின்னலின்போது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, தொலைபேசி, மிக்ஸி, கிரைண்டா் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். ஈரமான கைகளோடு மின் விளக்கு சுவிட்சை பயன்படுத்தக்கூடாது. மின் கசிவு விபத்தை தவிா்க்க, ஆா்.சி.சி.பி. பிரேக்கா் பொருத்த வேண்டும்.

மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின்சாரம் சாா்ந்த புகாா்களுக்கும், மின் கம்பிகள் அறுந்து விழும் அவசர காலங்களிலும் செயற்பொறியாளா்களைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.