கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜேசிபி மீது ஆட்டோ மோதல்: முதியவா் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே பொக்லைன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:47 pm

Din

திண்டிவனம் அருகே பொக்லைன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், நெய்குப்பி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. வைத்திலிங்கம்(74). முதியவரான இவா் புதன்கிழமை நெய்குப்பியிலிருந்து - திண்டிவனத்துக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த ஞானவேல் என்பவா் ஆட்டோவை ஓட்டினாா்.

அப்போது நெய்குப்பி பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி பொக்லைன் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் வைத்திலிங்கத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.