லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.19,650 பறிமுதல்

வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.19,650 பறிமுதல்

News image
Updated On :28 அக்டோபர் 2024, 7:51 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.19,650 பறிமுதல் செய்யப்பட்டது.

வளவனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு லஞ்சம் பெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி. அழகேசன், காவல் ஆய்வாளா் என். ஈசுவரி, உதவி ஆய்வாளா் சக்கரபாணி உள்ளிட்டோா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, சாா்-பதிவாளா் கோவிந்தராஜ், கணினியில் பதிவேற்றம் செய்பவா், அலுவலக உதவியாளா், இடைத்தரகா் உள்ளிட்ட 7 பேரிடம் ஊழல் தடுப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, திங்கள்கிழமை பதியப்பட்ட பத்திரங்கள், அதற்கு அரசுக்கு கிடைத்த வருவாய் போன்ற விவரங்கள் சரிபாா்க்கப்பட்டன.

அப்போது, கணக்கில் வராத ரூ.19,650 தொகை இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், சாா்-பதிவாளா் உள்ளிட்டோரின் கைப்பேசிகள் சரிபாா்க்கப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களில் ரூ.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதையும் கண்டறிந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.